''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ஹன்சிகா. தற்போது தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள கார்டியன் என்ற திகில் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் ஆர் .கண்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் தற்போது நடிக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கும் நிலையில், நேற்று சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா மற்றும் இயக்குனர் ஆர். கண்ணன் ஆகியோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் சோஹல் கதூரியா என்ற தனது நண்பரான பிசினஸ் பார்ட்னரை டிசம்பர் நான்காம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் ஹன்சிகா. அதனால் திருமண வேலைகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த நிலையிலும் தற்போது அவர் புதிய படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி வருவதைப் பார்க்கையில் திருமணத்திற்கு பிறகும் பிரேக் கொடுக்காமல் தொடர்ந்து ஹன்சிகா சினிமாவில் நடிப்பார் என்பது தெரிகிறது.