மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கமல்ஹாசனின் 'விருமாண்டி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சாய் தீனா. தொடர்ந்து கொம்பன், தெறி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டியிருக்கிறார். அதேசமயம் நிஜத்தில் இவரை பலருக்கும் பிடிக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் சாய் தீனா, தொடர்ந்து சமூகம் குறித்து மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் பேசி வருகிறார். பேச்சோடு மட்டுமல்லாமல், தனது பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், மாணவர்கள் தவறான வழியில் செல்லக்கூடாது என்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் கூட வீடுகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்தார். இந்நிலையில், சாய்தீனா, பிக்கு மெளரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகளை ஏற்று தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார். அவரது இந்த அதிரடி மதமாற்றம் சோஷியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.