மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தற்போது திரைப்பட பணிகளிலும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு வசனம் எழுதுகிறார். சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு படங்களுக்கு அவர்தான் வசனம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' என்ற சிறுகதை 'ரத்தசாட்சி' என்ற பெயரில் சினிமா ஆகியுள்ளது. இப்படத்தை ரபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார், ஜாவேத் ரியாஸ் இசை அமைத்துள்ளார், ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர். ஆஹா ஓடிடி தளத்திற்காக அனிதா மகேந்திரன் தயாரிக்கிறார்.
இதுகுறித்து ஜெயமோகன் கூறியிருப்பதாவது: இந்த கதையை படமாக்க மணிரத்னம் விரும்பினார். இயக்குனர் வெற்றி மாறன் இந்த கதையின் உரிமையை கேட்டார். ஆனால் இவர்கள் கேட்டதற்கு சில மாதங்களுக்கு முன்பு ரபிக் இஸ்மாயில் என்ற இளைஞர் என்னை சந்தித்து இந்த கதையை திரைப்படமாக்கும் உரிமையை பெற்றுச் சென்று விட்டார். அந்த கதைதான் ரத்தசாட்சி என்ற பெயரில் படமாகி உள்ளது. என்கிறார் ஜெயமோகன்.