போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தற்போது திரைப்பட பணிகளிலும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு வசனம் எழுதுகிறார். சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு படங்களுக்கு அவர்தான் வசனம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' என்ற சிறுகதை 'ரத்தசாட்சி' என்ற பெயரில் சினிமா ஆகியுள்ளது. இப்படத்தை ரபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார், ஜாவேத் ரியாஸ் இசை அமைத்துள்ளார், ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர். ஆஹா ஓடிடி தளத்திற்காக அனிதா மகேந்திரன் தயாரிக்கிறார்.
இதுகுறித்து ஜெயமோகன் கூறியிருப்பதாவது: இந்த கதையை படமாக்க மணிரத்னம் விரும்பினார். இயக்குனர் வெற்றி மாறன் இந்த கதையின் உரிமையை கேட்டார். ஆனால் இவர்கள் கேட்டதற்கு சில மாதங்களுக்கு முன்பு ரபிக் இஸ்மாயில் என்ற இளைஞர் என்னை சந்தித்து இந்த கதையை திரைப்படமாக்கும் உரிமையை பெற்றுச் சென்று விட்டார். அந்த கதைதான் ரத்தசாட்சி என்ற பெயரில் படமாகி உள்ளது. என்கிறார் ஜெயமோகன்.