லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சூர்யா நடித்து, தயாரித்த ஜெய்பீம் படத்தில் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் இருளர் இளைஞனாக நடித்தவர் மணிகண்டன். அதற்கு முன்பு விக்ரம் வேதா, காலா படங்களில் நடித்திருந்தார். சில்லுகருப்பட்டி அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்திருந்தார். ஜெய்பீம் வெற்றிக்கு பிறகும் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த மணிகண்டன் தற்போது புதிய படம் ஒன்றில் முதன் முறையாக நாயகனாக நடிக்கிறார்.
மணிகண்டனுடன் மீரா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் நடிக்கிறார்கள். ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ஒரு இளைஞனுக்கு தூக்கத்தில் சத்தமா குறட்டை விடும் குறைபாடு இருந்தால் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் எப்படி இருக்கும் என்பதை காமெடியாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.