பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சூர்யா நடித்து, தயாரித்த ஜெய்பீம் படத்தில் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் இருளர் இளைஞனாக நடித்தவர் மணிகண்டன். அதற்கு முன்பு விக்ரம் வேதா, காலா படங்களில் நடித்திருந்தார். சில்லுகருப்பட்டி அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்திருந்தார். ஜெய்பீம் வெற்றிக்கு பிறகும் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த மணிகண்டன் தற்போது புதிய படம் ஒன்றில் முதன் முறையாக நாயகனாக நடிக்கிறார்.
மணிகண்டனுடன் மீரா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் நடிக்கிறார்கள். ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ஒரு இளைஞனுக்கு தூக்கத்தில் சத்தமா குறட்டை விடும் குறைபாடு இருந்தால் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் எப்படி இருக்கும் என்பதை காமெடியாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.