‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கன்னட மொழியில் வெளியான காந்தாரா திரைப்படம் இந்தியா முழுக்க வரவேற்பை பெற்றுள்ளது. கலை, அரசியலை சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் ரஜினிகாந்தும் மனம் திறந்து பாராட்டினார். படத்தை பார்த்துவிட்டு, "தெரிந்தவர்களை விட தெரியாதவர்கள் அதிகம். ஹோம்பேல் பிலிம்ஸை விட யாராலும் இதை சிறப்பாக சொல்ல முடியாது. காந்தாரா என் மனதை நெகிழ வைத்தது. எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். இந்த தலைசிறந்த படைப்பில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இது இந்திய சினமாவின் மாஸ்டர்பீஸ்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி, "அன்புள்ள ரஜினிகாந்த் சார், நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். நான் சிறுவயதில் இருந்தே உங்கள் ரசிகன். உங்களின் பாராட்டால் என் கனவு நனவானது. இது போன்ற உள்ளூர் கதைகளை செய்ய நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். நன்றி சார்" என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். படம் பற்றிய அவரது ஆச்சர்யங்களை ரிஷப் ஷெட்டியுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். ரிஷப் ஷெட்டியும் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்.




