புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
செப்டம்பர் மாதத்தில் வெளியான இரண்டு படங்களான 'பொன்னியின் செல்வன், காந்தாரா' ஆகிய படங்கள் மொத்தமாக 700 கோடியை வசூலித்து சாதனை புரிந்துள்ளன. தமிழில் தயாரான 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவந்தது. அதே தினத்தில் கன்னடத்தில் தயாரான 'காந்தாரா' படம் வெளிவந்தது. வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் இந்தப் படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
200 கோடி செலவில் இரண்டு பாகங்களாக தயாரான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் மட்டும் 500 கோடி வசூலைத் தொட உள்ளது. 15 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 'காந்தாரா' படத்தின் வசூல் 'பொன்னியின் செல்வன்' வசூலை விட அதிகமாக இருக்கிறது. சொல்லப் போனால் 'பொன்னியின் செல்வன்' படத்தை விடவும் மற்ற மொழிகளில் 'காந்தாரா' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
தியேட்டர்களில் ஒன்றுக்கொன்று போட்டியிட்ட இரண்டு படங்களும் ஓடிடி வெளியீட்டிலும் மோத உள்ளன. இரண்டு படங்களும் அமேசான் ஓடிடி தளத்தில் நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களுக்கும் ஓடிடி தளத்திலும் போட்டியுடன் கூடிய அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.