வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்க, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான வெளியிட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
மேலும், வரும் அக்டோபர் 21ம் தேதியன்று தெலுங்கிலும் வெளியாக உள்ள இப்படத்திற்கான பேட்டிகளைக் கொடுக்க படக்குழுவினர் ஐதராபாத் சென்றுள்ளனர். காலை முதலே அந்த வேலைகள் நடந்து வருகிறது. இன்று மாலை நடைபெற உள்ள விழாவில் சிறப்பு விருந்தினர்களாக 'லைகர்' கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, 'பாகுபலி' வில்லன் ராணா டகுபட்டி, பிரபல இயக்குனர் ஹரிஷ் சங்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சிவகார்த்திகேயனைப் போலவே எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சுயமாக முன்னேறியவர்தான் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா. அதனால், அவர் இன்று சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட விழாவில் கலந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என டோலிவுட்டிலும் பேசிக் கொள்கிறார்கள்.