அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? |
தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்க, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான வெளியிட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
மேலும், வரும் அக்டோபர் 21ம் தேதியன்று தெலுங்கிலும் வெளியாக உள்ள இப்படத்திற்கான பேட்டிகளைக் கொடுக்க படக்குழுவினர் ஐதராபாத் சென்றுள்ளனர். காலை முதலே அந்த வேலைகள் நடந்து வருகிறது. இன்று மாலை நடைபெற உள்ள விழாவில் சிறப்பு விருந்தினர்களாக 'லைகர்' கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, 'பாகுபலி' வில்லன் ராணா டகுபட்டி, பிரபல இயக்குனர் ஹரிஷ் சங்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சிவகார்த்திகேயனைப் போலவே எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சுயமாக முன்னேறியவர்தான் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா. அதனால், அவர் இன்று சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட விழாவில் கலந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என டோலிவுட்டிலும் பேசிக் கொள்கிறார்கள்.