புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இந்திய அளவில் ஹிந்தித் திரைப்படங்கள்தான் அதிக அளவிலான 100 கோடி வசூல் படங்களை வைத்துள்ளன. இதுவரையில் வெளிவந்த படங்களில் சுமார் 100 ஹிந்திப் படங்கள் 100 கோடி வசூலைப் பெற்ற படங்களாக உள்ளன. “பாகுபலி 2, கேஜிஎப் 2, டங்கல்' ஆகிய படங்கள் 1000 கோடி வசூலைப் பெற்ற படங்கள்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் சில தென்னிந்திய மொழிப் படங்கள்தான் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. தமிழில் 30 படங்களும், தெலுங்கில் 10 முதல் 15 படங்களும், மலையாளத்தில் 7 படங்கள் வரையிலும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. ஆனால், கன்னடத்தில் மிகக் குறைவாக 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருக்கின்றன.
'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம்தான் முதன் முதலில் 100 கோடி வசூலைக் கடந்த கன்னடப் படமாக அமைந்தது. அதற்குப் பிறகு இந்த ஆண்டில் வெளிவந்த கிச்சா சுதீப் நடித்த 'விக்ராந்த் ரோணா', மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த 'ஜேம்ஸ்', ரக்ஷித் ஷெட்டி நடித்து வெளிவந்த '777 சார்லி', மற்றும் யஷ் நடிப்பில் வெளிவந்த 'கேஜிஎப் 2' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன.
இப்போது அந்த வரிசையில் 100 கோடி வசூலைக் கடந்த படமாக ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் செப்டம்பர் 30ல் வெளிவந்த 'காந்தாரா' படம் நேற்று 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. மிகச் சிறிய படமாக தயாராகி வெளிவந்த இந்தப் படம் ஆச்சரியப்படும் விதத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. எப்படியும் ஓடி முடியும் போது இந்தப் படம் மொத்த வசூலில் 200 கோடியைக் கடக்கும் என சாண்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கன்னட சினிமாவில் இந்த ஆண்டில் வெளிவந்த 5 படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.