'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி |
மேயாதமான் படத்தில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்தவர் இந்துஜா. சமீபத்தில் வெளியான நானே வருவேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் “நான் நடித்த படங்களிலேயே மோசமானது பில்லா பாண்டி என்ற படம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தயாரித்து, அவரே நாயகனாகவும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.கே.சுரேஷ் இந்துஜாவின் இந்த கருத்து குறித்து வெளிப்படையாக பேசினார். அவர் பேசியதாவது: நடிகை இந்துஜா நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அந்த நேர்காணலில் இந்துஜாவிடம், 'நீங்கள் நடித்ததிலேயே மோசமான படம் எது?' என கேள்வி கேட்கிறார்கள். அதற்கு அவர், ''பில்லா பாண்டி'' என கூறியிருக்கிறார்.
'பில்லா பாண்டி' படத்தில் நான் தான் அவரை அறிமுகப்படுத்தினேன். அவருக்கு அது தான் முதல் படம். அப்போது தொடர்ந்து 4 படங்கள் என்னுடைய ஸ்டூடியோ 9 தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்தமானார். பில்லா பாண்டி நல்ல கதைக்களம் கொண்ட படம். எனக்கு மிகவும் பிடித்த படம். இந்துஜாவிற்கு அப்படி இருக்க வேண்டும் என அவசியமில்லை.
நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ அதை நான் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஏற்றிய ஏணியை மறந்துவிடக்கூடாது. சினிமா ஒரு பெரிய வட்டம். ஒரு ராட்டினம் போல சுற்றி கீழே வந்துவிடும். அதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.