பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சென்னை : வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக, நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளிடம் நேரில் விசாரிக்க, அரசு அமைத்த குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர், சென்னையில் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நான்கு மாதங்களே ஆகும் நிலையில், 'நானும், நயன்தாராவும் அம்மா, அப்பா ஆனோம்' என, சமூக வலைதள பதிவில், விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.
வாடகை தாய் வாயிலாக, நயன்தாரா குழந்தை பெற்றது தெரிய வந்தது. இதில், விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. விசாரணை நடத்தப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சுகாதாரத்துறை அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர், ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக, 2021 டிசம்பரிலேயே ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக, கடந்த ஆண்டு டிசம்பரிலேயே ஒப்பந்தம் போட்டிருந்தால், மருத்துவமனை நிர்வாகம், அப்போதே முறைப்படி அரசுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். வாடகை தாய் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடந்து வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவனிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.