இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் | மீண்டும் வெளியாகும் பாஸ் என்கிற பாஸ்கரன் | போதை பொருள் விளம்பரம் : ஷாருக்கான், அஜய் தேவ்கான் ஆஜராக நுகர்வோர் கமிஷன் உத்தரவு | ரசிகர் கன்னத்தில் பளார் விட்ட ராகினி | தமிழ் சினிமாவை குறை சொன்ன ஜோதிகா: மவுனம் கலைப்பாரா சூர்யா? | பிளாஷ்பேக்: முதல் கன்னடத்து பசுங்கிளி | ஆரம்பமானது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு | பிளாஷ்பேக் : ஆன்மிக வாழ்க்கை வாழும் நடிகை சச்சு |
ஒரு சிறிய கன்னடப் படம் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படி வெளியானதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது 'காந்தாரா' படத்தின் சென்னை வெளியீடு. ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கன்னடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், விமர்சனமும் பெற்ற படம் 'காந்தாரா'. கன்னடத்தில் சில மாதங்களுக்கு முன்பு தயாராகி வெளிவந்த 'கேஜிஎப் 2' படத்தைத் தயாரித்த ஹாம்பாலே பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
கன்னட மொழியில் தமிழகத்தில் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று ஹிந்தி, தெலுங்கிலும், நாளை தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி தமிழ்த் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் சில காட்சிகளுக்கான முன்பதிவுகளும் சிறப்பாகவே நடைபெற்று வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் இந்த படத்தை பார்க்க முடியும் என்பது அதியம் தான். எந்த ஒரு கன்னட படத்திற்கும் இதற்கு முன்பு இப்படி நடத்திருக்குமா என்பது சந்தேகமே.