தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
ஒரு சிறிய கன்னடப் படம் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படி வெளியானதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது 'காந்தாரா' படத்தின் சென்னை வெளியீடு. ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கன்னடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், விமர்சனமும் பெற்ற படம் 'காந்தாரா'. கன்னடத்தில் சில மாதங்களுக்கு முன்பு தயாராகி வெளிவந்த 'கேஜிஎப் 2' படத்தைத் தயாரித்த ஹாம்பாலே பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
கன்னட மொழியில் தமிழகத்தில் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று ஹிந்தி, தெலுங்கிலும், நாளை தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி தமிழ்த் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் சில காட்சிகளுக்கான முன்பதிவுகளும் சிறப்பாகவே நடைபெற்று வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் இந்த படத்தை பார்க்க முடியும் என்பது அதியம் தான். எந்த ஒரு கன்னட படத்திற்கும் இதற்கு முன்பு இப்படி நடத்திருக்குமா என்பது சந்தேகமே.