கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து திரை உலகை சார்ந்த ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வரும் நிலையில், தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதில், ‛‛பொன்னியின் செல்வன் படம் வசீகரிக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் ஒரு தரமான சரித்திர படம். பிலிம் மேக்கிங்கில் தான் ஒரு கிங் என்பதை மீண்டும் மணிரத்னம் நிரூபித்திருக்கிறார். அழகாக காட்சிப்படுத்தி உள்ள ரவி வர்மனுக்கு தலைவணங்குகிறேன். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இனிமையாக உள்ளது. மூன்று மணி நேரம் சூழ்ச்சிகள் நிறைந்த இந்த கதை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இப்படி ஒரு சிறப்புமிக்க வரலாற்று படத்தை கொடுத்த பிரம்மாண்ட குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.