பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியா சார்பாக இந்தப் படம் தேர்வு செய்யப்படும் என்று தெலுங்குத் திரையுலகினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' படம் தேர்வு செய்யப்பட்டது.
இருப்பினும் ஆஸ்கர் விருதுக்கு நேரடியாகப் போட்டியில் இறங்கியுள்ளது 'ஆர்ஆர்ஆர்'. பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் படக்குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் போட்டியில் குதிக்கிறார்கள். இத்தனை பிரிவுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் போட்டியிடுவதை பலரும் கிண்டலடித்து வருகிறார்கள். அதிலும் படத்தில் 'ஐந்து நிமிடமே வந்த ஆலியா பட்' சிறந்த துணை நடிகைக்கான விருதுகளுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளதை ரசிகர்கள் அதிகமாக விமர்சித்து வருகிறார்கள்.
படத்தில் வெள்ளைக்காரனை வில்லனாகக் காட்டிவிட்டு, அவனிடமே விருதுகளுக்காக போய் நிற்பதா என்றும் சிலர் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளார்கள். தமிழில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தை தெலுங்கு ஊடகங்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சித்த நிலையில் தற்போது தெலுங்குப் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும் பயங்கரமாக கிண்டலடித்து வருகிறார்கள். “ஆஸ்கர் போட்டியில் 'ஆர்ஆர்ஆர்'' என்ற தலைப்பிலான மீம்ஸ்கள் நேற்று முதல் அதிகமாகப் பரவி வருகிறது.




