ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படம் வெளியான ஐந்து நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது வெளிநாடுகளிலும் கூட இப்படம் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் அப்டேட் செய்துள்ளார்கள்.
அமெரிக்கா, அரேபிய நாடுகள், இங்கிலாந்து, மலேசிய, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா என தமிழர்கள் அதிகமாக வசூலிக்கும் நாடுகளில் இப்படத்தின் வசூல் இதற்கு முன்பு வெளியான முன்னணி ஹீரோக்களின் படங்களைக் காட்டிலும் அதிகமாக வசூலிப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்காவில் மட்டுமே இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும், அடுத்ததாக அரேபிய நாடுகளில் ரூ.19 கோடி வரையிலும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்த் திரைப்படம் ஒன்று வெளிநாடுகளிலும் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடி வசூல் சாதனையைப் படைத்திருப்பது இதுவே முதல் முறை. இந்த வார இறுதி நாட்களிலும் வெளிநாடுகளில் இப்படம் இன்னும் வசூலைக் குவிக்கும் என்கிறார்கள்.