ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படம் வெளியான ஐந்து நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது வெளிநாடுகளிலும் கூட இப்படம் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் அப்டேட் செய்துள்ளார்கள்.
அமெரிக்கா, அரேபிய நாடுகள், இங்கிலாந்து, மலேசிய, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா என தமிழர்கள் அதிகமாக வசூலிக்கும் நாடுகளில் இப்படத்தின் வசூல் இதற்கு முன்பு வெளியான முன்னணி ஹீரோக்களின் படங்களைக் காட்டிலும் அதிகமாக வசூலிப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்காவில் மட்டுமே இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும், அடுத்ததாக அரேபிய நாடுகளில் ரூ.19 கோடி வரையிலும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்த் திரைப்படம் ஒன்று வெளிநாடுகளிலும் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடி வசூல் சாதனையைப் படைத்திருப்பது இதுவே முதல் முறை. இந்த வார இறுதி நாட்களிலும் வெளிநாடுகளில் இப்படம் இன்னும் வசூலைக் குவிக்கும் என்கிறார்கள்.