ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாளத்தில் தனது அறிமுகத்தை துவங்கிய துல்கர் சல்மான் கடந்த 10 வருடங்களில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக உயர்ந்து நிலையான இடத்தை பிடித்துள்ளதுடன் தற்போது பாலிவுட்டிலும் தேடப்படும் நபராக மாறியுள்ளார். சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்த சீதாராமம் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது, பல பேட்டிகளில் அவரிடம் கேட்கப்படுவது என்னவென்றால் எப்போது அவரது தந்தை மம்முட்டியுடன் அவர் இணைந்து நடிக்கப் போகிறார் என்பது தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “நான் எப்போதுமே என் தந்தையுடன் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் இன்னும் அவர் பக்கமிருந்து எந்த ஒரு கிரீன் சிக்னலும் வரவில்லை. இப்பொழுதே வெள்ளை முடிகள் எட்டிப்பார்க்கின்ற தாடியை மஸ்காரா போட்டு சமாளித்து வருகிறேன். அவர் அப்படியேதான் இருக்கிறார். இப்போது அவர் இருக்கும் தோற்றத்தைப் பாருங்கள்.. ஒருவேளை அவருக்கு தந்தையாக கூட நான் நடிக்கும் நிலை வந்தாலும் வரலாம்” என்று தந்தையை வியந்து பாராட்டியுள்ளார் துல்கர் சல்மான்