தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் |

பாடகி சின்மயி பாடலை தாண்டி அறியப்பட்டவர். துணிச்சலான கருத்துக்களை கூறக்கூடியவர். எவருக்கும் அஞ்சாமல் நியாயத்தை பேசுகிறவர் என்கிற இமேஜ் அவருக்கு உண்டு. அவர் அடிப்படையில் ஒரு டப்பிங் கலைஞரும்கூட. டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவரை நீக்க பெரிய பெரிய ஆட்கள் முயற்சித்தபோதும் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி அதில் நீடித்து வருகிறார்.
சின்மயி முன்னணி நடிகைகள் பலருக்கு டப்பிங் பேசி வருகிறார். அவற்றில் முக்கியமானவர் சமந்தா. தற்போது நன்றாக தெலுங்கு பேச கற்றுக் கொண்ட சமந்த தனது தெலுங்கு படங்களுக்கு தானே பேசி வருகிறார். இதனால் சமந்தாவுடன் ஆன டப்பிங் பயணம் முடிவுக்கு வருவதாக சின்மயி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கேரக்டர்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது. என்று தெரிவித்துள்ளார்.