'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாய் நடந்தது. நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய நாயகன் சிம்பு, பெற்றோருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் வைத்தார்.
அவர் கூறுகையில், ‛‛தயவு செய்து பசங்களை திருமணம் செய்ய சொல்லி பெற்றோர்கள் டார்ச்சர் பண்ணாதீங்க. அவசரப்பட்டு திருமணம் செய்த பலருடைய வாழ்க்கை பிரச்னைகளில் சிக்கியதை நாம் பார்க்கிறோம். நமக்கும் மேலே ஒருத்தர் இருக்கார். சரியான நேரத்தில் எல்லாவற்றையும் செய்வார் என்று கூறியவர், அப்பா அம்மாவை யாரும் கை விடாதீங்க என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
தொடர்ந்து பேசிய சிம்பு, நடிகர் கமலிடம் உங்களின் எந்த படத்தை நான் ரீ-மேக் செய்து நடிக்கணும் அல்லது இரண்டாம் பாகத்தில் நடிக்கணும் என்று கேட்டார். அதற்கு, ‛‛நீங்கள் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். ரீமேக், இரண்டாவது பாகம் எல்லாம் வேண்டாம். என்னுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடியுங்கள்'' என்றார் கமல்.