300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தஞ்சை மண்ணில் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அந்த ஆட்சிக்கு பாதுகாவலர்களாகவும், விசுவாசமிக்க நண்பர்களாகவும் இருந்தவர்கள் பெரிய பழுவேட்டரையரும், சின்ன பழுவேட்டரையரும். இவர்கள் பழுவூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர்கள். சுந்தர சோழரின் ஆட்சி காலத்தில் பழுவூர்ச் சகோதரர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள். காலாந்தகக் கண்டர் சின்ன பழுவேட்டரையர் எனவும், கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் எனவும் அழைக்கப்ட்டார்கள்.
பெரிய பழுவேட்டரையர் 24 யுத்தங்களில் பங்கெடுத்து 64 விழுப்புண்கள் பெற்ற வீரராகவும் இருந்தார். அதே நேரத்தில் வயதான காலத்தில், நந்தினி எனும் இளம் பெண்ணை திருமணம் செய்து அவள் காதலுக்காகவும் உருகினார். ஆனால் நந்தினி ஆட்சியை பிடிக்கத்தான் தன்னை மணந்தாள் என்பதை அறிந்த பெரிய பழுவேட்டரையர் அவளை விரட்டி அடித்து விட்டு தன் வாளினாலேயே மரணத்தை தழுவினார். அண்ணனுக்கு எப்போதும் துணை நின்றார் சின்ன பழுவேட்டைரையர்.
பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற இந்த இரு முக்கியமான கேரக்டர்களில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், இளைய பழுவேட்டரையராக பார்த்திபனும் நடித்திருக்கிறார்கள். அவர்களின் தோற்றம் நேற்று வெளியிடப்பட்டு வைரலாக பரவியது.