சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் |
'காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420' போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். கடந்த 2018ல் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை திருமணம் செய்து கொண்டார். 2020ல் மாரடைப்பால் திடீரென காலமானார் சிரஞ்சீவி. அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னாவிற்கு கணவரின் இழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கணவர் இழப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் மேக்னா படங்களிலும் நடிக்கிறார். இந்நிலையில் இவரை மறு திருமணம் செய்ய சொல்லி சிலர் கூறி வருகின்றனர்.
இதுபற்றி மேக்னா கூறுகையில், ‛‛ஒரு கூட்டம் என்னை 2வது திருமணம் செய்ய சொல்கிறது. சிலர் உங்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்கின்றனர். நான் எதை கேட்பது. பலரும் பல விதமான ஆலோசனைகளை சொல்வார்கள். முடிவு நீ தான் எடுக்க வேண்டும் என எப்போதும் எனது கணவர் கூறுவார். அவர் கூறியபடி இப்போதைக்கு நான் எனது குழந்தையை வளர்ப்பது மற்றும் அவன் எதிர்காலம் பற்றி மட்டும் சிந்திக்கிறேன். வேறு எந்த எண்ணமும் இல்லை'' என்கிறார்.