நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
'காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420' போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். கடந்த 2018ல் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை திருமணம் செய்து கொண்டார். 2020ல் மாரடைப்பால் திடீரென காலமானார் சிரஞ்சீவி. அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னாவிற்கு கணவரின் இழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கணவர் இழப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் மேக்னா படங்களிலும் நடிக்கிறார். இந்நிலையில் இவரை மறு திருமணம் செய்ய சொல்லி சிலர் கூறி வருகின்றனர்.
இதுபற்றி மேக்னா கூறுகையில், ‛‛ஒரு கூட்டம் என்னை 2வது திருமணம் செய்ய சொல்கிறது. சிலர் உங்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்கின்றனர். நான் எதை கேட்பது. பலரும் பல விதமான ஆலோசனைகளை சொல்வார்கள். முடிவு நீ தான் எடுக்க வேண்டும் என எப்போதும் எனது கணவர் கூறுவார். அவர் கூறியபடி இப்போதைக்கு நான் எனது குழந்தையை வளர்ப்பது மற்றும் அவன் எதிர்காலம் பற்றி மட்டும் சிந்திக்கிறேன். வேறு எந்த எண்ணமும் இல்லை'' என்கிறார்.