புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
தமிழ் சினிமாவில், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களிடம் குறுகிய காலகட்டத்தில் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். குறிப்பாக விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். ஒரு கட்டத்தில் ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கும் அளவுக்கு முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இன்னொரு பக்கம் ஸ்டோன் பெஞ்ச் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி புதிய இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார். மேலும் நான்கைந்து குறும்படங்களை கொண்ட ஆன்தாலாஜி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் முதன்முதலாக 'அட்டென்ஷன் ப்ளீஸ்' என்கிற திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் மலையாள திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். ஜிதின் இசாக் தாமஸ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை கார்த்திகேயன் சந்தானம் என்பவர் தயாரித்துள்ளார். தனது ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.