அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பு தவிர்த்து சமூக சேவையில் மிகவும் அக்கறை கொண்டவர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல இடங்களில் ரத்தவங்கி நடத்தி வருகிறார். இந்த மாநிலங்களில் தனியார் நடத்தும் ரத்த வங்கிகளில் இதுதான் பெரிது என்கிறார்கள். கொரோனா காலத்தில் மக்களுக்கு பணியாற்றுவதற்கென்றே தனி குழுவை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கென்று மருத்துவமனை ஒன்றை கட்டுகிறார். மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் நினைவாக இதனை கட்டுகிறார். ஐதராபத்தில் உள்ள சித்தாபுரி பகுதியில் இது அமைகிறது. இந்த மருத்துவமனை கட்ட தெலுங்கு கிரிக்கெட் சங்கம் சிரஞ்சீவி மருத்துவ அறக்கட்டளைக்கு 20 லட்சம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
”நான் சம்பாதித்தது எல்லாம் சினிமாவில்தான். சினிமா தொழிலாளர்களின் உழைப்பால்தான். அதை அவர்களுக்கு சிறிதளவேனும் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த மருத்துவமனையை கட்ட இருக்கிறேன். எத்தனை கோடி செலவானாலும் இதை கட்டிமுடிப்பேன்” என்கிறார் சிரஞ்சீவி.