‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ், லைகா நிறுவனம் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து உள்ளனர்.
முதல்பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி பிரம்மாண்டமான அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களை இயக்குனர் மணிரத்னம் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.




