‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இரண்டு வருடங்களுக்கு முன்பு கவுதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.
தமிழில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் காஜல் அகர்வால் விரைவில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. இந்நிலையில் 'பாகுபலி' கட்டப்பா பாணியில் ராஜமவுலிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
'பாகுபலி'க்கு தான் அடிமை என்பதைக் குறிக்கும் வகையில் அவரது காலை எடுத்து தன் தலையின் மீது வைப்பார் கட்டப்பா. அது போலவே தனது குழந்தையின் காலை தன் தலை மீது வைத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து, “ராஜமவுலி சார், இது உங்களுக்காக நீல் மற்றும் என்னுடைய அர்ப்பணிப்பு. நாங்கள் எப்படி முடியாது என்று சொல்ல முடியும்” என அப்பதிவில் 'பாகுபலி' படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபட்டி, ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா ஆகியோரை டேக் செய்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்து தெலுங்கில் முதன் முதலில் அதிக வசூலைப் பெற்ற 'மகதீரா' படத்தில் காஜல் அகர்வால் தான் கதாநாயகி என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.




