கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
70களின் துவக்கத்தில் தெலுங்குத் திரையுலகத்தில் திரையுலகில் அறிமுகமாகி தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்தவர் ஜெயசுதா. தெலுங்கில் மட்டும் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
தமிழில் “அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும்” உள்ளிட்ட சில படங்கள் அவர் நடித்த முக்கியமான படங்கள்.
சென்னையில் பிறந்து வளர்ந்த ஜெயசுதா பின்னர் ஐதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். 2001ல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஜெயசுதா காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2009ல் செகந்தராபாத் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதன் பின் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த ஜெயசுதா சமீபத்தில் தெலங்கானா பாஜக தலைவர்களில் ஒருவரான ஏடெலா ராஜசேகரை சந்தித்துப் பேசியுள்ளார்.
அதன் பின் பாஜகவில் இணைய சம்மதித்துள்ளதாகவும் விரைவில் சேர உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. பாஜகவில் ஏற்கெனவே தெலுங்குத் திரையுலகின் முன்னாள் முன்னணி கதாநாயகியான விஜயசாந்தியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல நட்சத்திரங்களும் பாஜகவில் உள்ளனர். அவர்கள் வரிசையில் தற்போது ஜெயசுதாவும் இணைய உள்ளார்.