ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'புஷ்பா'. அப்படம் தமிழகத்திலும் நல்ல வசூலைப் பெற்றது. தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்தாலும் படத்தின் அனைத்துப் பாடல்களும் இங்கும் ஹிட் ஆகின.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சில பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது. செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இதனிடையே, இரண்டாம் பாகத்திற்கான பாடல் இசைக்கோர்ப்பு வேலைகளை செக் குடியரசில் உள்ள பராகுவே நகரில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், பாடலாசிரியர் சந்திரபோஸ் அதற்கான ஆலோசனைகளில் உள்ளனர். இது குறித்த தகவலை இயக்குனர் சுகுமாரின் மனைவி தபிதா வெளியிட்டுள்ளார்.