படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
சர்க்காரு வாரி பாட்டா படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் டைரக்ஷனில் மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகியுள்ளது. அதேசமயம் இதற்கு முன்னதாக ஏற்கனவே இயக்குனர் ராஜமவுலி, அடுத்ததாக தான் மகேஷ்பாபு படத்தை இயக்க உள்ளதாக கூறியிருப்பதால் அந்த படம் எப்போது என்பது குறித்த எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. காரணம் முதல் முறையாக ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார் என்பதுதான்.
இந்த நிலையில் ராஜமவுலி படத்தில் நடிப்பது குறித்து மகேஷ்பாபு கூறும்போது, ‛‛இயக்குனர் ராஜமவுலியின் ஒரு படத்தில் நடித்தால் அது 25 படங்களில் நடித்ததற்கு சமம். அந்த படத்திற்காக உடல் ரீதியாக நிறைய தயாராக வேண்டும். அவருடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.