மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் சினிமாவில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. ரஜினி ,கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அவர் இசை அமைத்திருக்கிறார். சமீபகாலமாக தேவா திரைப்படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும், அவ்வப்போது பின்னணி பாடி வருகிறார். அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா பல படங்களுக்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் சமீப காலமாக பக்தி பாடல்களுக்கு இசையமைத்து ஆல்பங்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் தேவா, தற்போது ‛கந்த முகமே' என்ற பெயரில் ஒரு முருகன் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற இசையமைப்பாளர் தேவா அங்கு மீடியாக்களை சந்தித்தார். அப்போது, திருச்செந்தூர் முருக பெருமானுக்காக கந்த முகமே என்ற பெயரில் ஆல்பம் ஒன்றே வெளியிட்டுள்ளேன். இந்த ஆல்பம் மூலம் கிடைக்கும் மொத்த பணத்தையும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கே வழங்கப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் தேவா.