பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் சினிமாவில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. ரஜினி ,கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அவர் இசை அமைத்திருக்கிறார். சமீபகாலமாக தேவா திரைப்படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும், அவ்வப்போது பின்னணி பாடி வருகிறார். அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா பல படங்களுக்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் சமீப காலமாக பக்தி பாடல்களுக்கு இசையமைத்து ஆல்பங்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் தேவா, தற்போது ‛கந்த முகமே' என்ற பெயரில் ஒரு முருகன் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற இசையமைப்பாளர் தேவா அங்கு மீடியாக்களை சந்தித்தார். அப்போது, திருச்செந்தூர் முருக பெருமானுக்காக கந்த முகமே என்ற பெயரில் ஆல்பம் ஒன்றே வெளியிட்டுள்ளேன். இந்த ஆல்பம் மூலம் கிடைக்கும் மொத்த பணத்தையும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கே வழங்கப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் தேவா.