மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வீஜே பார்வதி தமிழ்நாட்டில் பலர் இதயங்களில் செலிபிரேட்டி என்ற அந்தஸ்தை பிடித்துவிட்டார். தைரியமான இவரது பேச்சும், நேர்மையும் பலரையும் ஈர்த்து வருகிறது. வீஜே, வீ-லாக்ஸ் என ஜாலியாக சுற்றி வரும் பார்வதி படங்களில் நடிக்கவும் தயாராகி வருகிறார். இன்ஸ்டாவில் இவரது போட்டோஷூட் எப்போதும் டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. விருமன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்காக மீடியா பிரபலங்கள் பலருடன் பார்வதியும் மதுரை சென்றிருந்தார். அங்கே அந்த நிகழ்ச்சிக்காக பட்டுத்தாவணி அணிந்துள்ள பார்வதி மதுரை வீதிகளில் நின்று ஹீரோயின் போல் போஸ் கொடுத்துள்ளார். பார்ப்பதற்கு செம கியூட்டாக இருக்கும் அந்த புகைப்படங்களை தாவணி சீரிஸ் என தனது பதிவிட்டுள்ளார்.
அதோடு, ‛‛இந்த 26 ஆண்டுகளில், பாரம்பரிய தோற்றத்தை நான் அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை. எனது கலாச்சாரம், மரபுகளை நான் ஒருபோதும் விட்டுவிட முடியாது. இதோ நான் ஜும்கி, தாவணி, பல வண்ண பூக்களுடன்... மதுரை பொண்ணு... தமிழ் பொண்ணு'' என பதிவிட்டுள்ளார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் பார்வதியின் அழகை பாராட்டி பலரும் பாசிட்டிவாக கமெண்ட் அடித்து வருகின்றனர். அதில் ஒருவர் 'இனி ஆங்கரிங் வேண்டாம் பேசாம நடிக்க போங்க' என்று பதிவிட, அதற்கு பார்வதி, 'அப்படியே வந்து குடுக்குறாய்ங்க பாரு சான்ஸூ' என நக்கலாக பதிலளித்துள்ளார்.