பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
'மவுண்ட் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2022' என்ற குறும்பட திருவிழாவில் இயக்குனர் வசந்தபாலன் பேசியதாவது: இந்த குறும்பட விழாவில் கலந்துகொண்ட ஐந்து குறும்படங்களை பார்த்த போது, இன்றைய இளைஞர்கள் டெக்னாலஜியை பயன்படுத்தி இயக்கனருக்கான திறமையை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்கள். இன்றைய படைப்பாளிகளுக்கு டெக்னாலஜி கதவுகள் அகலமாக திறந்தே இருக்கின்றன. அதனால் சாதாரண ஒரு கதையை கூட அழகாக எளிதாக படமாக்க முடிகிறது.
அதேசமயம் தமிழ் சினிமாவில் கதாசிரியர்களே இல்லை. தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம். குறும்படங்களால் இயக்குனர்கள் உருவாகின்றனர் ஆனால், எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவுக்குள் வரவே இல்லை. இனிமேல் கதாசிரியர்களிடம் கதையை பெற்று அதன் பின் நாயகர்களை தேடிச் செல்ல வேண்டும். இயக்குனர்களை போல எழுத்தாளர்களுக்கும் போட்டி வைத்து விருது தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.