பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
'விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு இயக்குனர் கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான், சிம்பு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படம் செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கான டப்பிங்கை முடித்துவிட்டதாக நேற்று சமூக வலைத்தளத்தில் சிம்பு பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கான இறுதிக் கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. சித்தி இதானி, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
சிம்பு நடித்து கடைசியாக வெளிவந்த 'மாநாடு' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இப்படத்தின் டீசரை கடந்த வருடக் கடைசியிலேயே வெளியிட்டார்கள். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு, டிரைலர் ஆகியவை வெளியாக உள்ளன.
கவுதம், ரஹ்மான், சிம்பு கூட்டணி 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. அதே சமயம் 'அச்சம் என்பது மடமையடா' படம் கால தாமத வெளியீட்டால் கவனம் ஈர்க்காமல் போய்விட்டது. 'வெந்து தணிந்தது காடு' படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப்போகிறது என்பதற்கு இன்னும் நாற்பத்தைந்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.