எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு இயக்குனர் கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான், சிம்பு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படம் செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கான டப்பிங்கை முடித்துவிட்டதாக நேற்று சமூக வலைத்தளத்தில் சிம்பு பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கான இறுதிக் கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. சித்தி இதானி, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
சிம்பு நடித்து கடைசியாக வெளிவந்த 'மாநாடு' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இப்படத்தின் டீசரை கடந்த வருடக் கடைசியிலேயே வெளியிட்டார்கள். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு, டிரைலர் ஆகியவை வெளியாக உள்ளன.
கவுதம், ரஹ்மான், சிம்பு கூட்டணி 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. அதே சமயம் 'அச்சம் என்பது மடமையடா' படம் கால தாமத வெளியீட்டால் கவனம் ஈர்க்காமல் போய்விட்டது. 'வெந்து தணிந்தது காடு' படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப்போகிறது என்பதற்கு இன்னும் நாற்பத்தைந்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.