புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது சென்னை அருகே, சரித்திரப் புகழ் வாய்ந்த மாமல்லபுரம் நகரில் நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு அதன் தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. தொடக்க விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார்.
மிகவும் பிரம்மாண்டமாக முப்பரிமாண முறையில் இடம் பெற்ற கலை நிகழ்ச்சிகள் பலரது பாராட்டைப் பெற்றது. இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள், விளையாட்டுப் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் விக்னேஷ் சிவனை அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்து விக்னேஷ் சிவன், “நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய நிகழ்வு. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே தனிப்பட்ட முறையிலும், நிகழ்ச்சி முடிந்த பின்னர் தொலைபேசியிலும் பாராட்டிய ரஜினி சாருக்கு நன்றி. உங்களின் குரலைக் கேட்டதும், பாராட்டியதும் மிகவும் மகிழ்ச்சிகரமானது. அந்நாளை மேலும் அழகாக்கியதற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.