எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
திருச்சி : திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
திருச்சியில், 47வது மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி, கடந்த 24ம் தேதி முதல், கே.க.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 27ம் தேதி, மாஸ்டர் பிரிவில், 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று சுடுதளத்திலும், பிஸ்டல் வகை போட்டிகளில், நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டு, இலக்கை நோக்கி சுட்டார்.
இதில், நடிகர் அஜித் குமார் அணி சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு, ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் பிரிவு, 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு ஆகியவற்றில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் பிரிவு ஆகியவற்றில் வெண்கல பதக்கமும் என 6 பதக்கங்களை வென்றது.
அஜித்குமார் உட்பட மூன்று பேர் கலந்த கொண்ட போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் பதக்கங்களை வென்று உள்ளதாக, ரைபிள் கிளப் தரப்பில் தெரிவித்தனர். இதற்கான பரிசளிப்பு விழா நாளை (31ம் தேதி) நடைபெற உள்ளது.