ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி விருந்து நடைபெறுவதை அறிந்த என்சிபி அதிகாரிகள், இது தொடர்பாக நடத்திய அதிரடி சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 23 வயது மகன் ஆர்யன் கானை கப்பலில் வைத்தே போதைப்பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். முதலில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அக்டோபர் 2ம் தேதி ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் என்சிபி தரப்பில் சுமார் 6,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 14 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆர்யன் கான் பெயர் இதில் இடம் பெறவில்லை. இதனால் ஆர்யன்கான் விடுதலை செய்யப்பட்டார். ஆர்யன்கான் சும்மா விருந்துக்குதான் சென்றார் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்று அதற்கு விளக்கம் சொன்னார்கள்.
இந்த நிலையில் மும்பையில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் ஆர்யன் கலந்து கொண்டதாக நேற்று ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ஆர்யன்கான் கருப்பு சட்டை அணிந்து சரக்கு பார்ட்டியில் பங்கேற்ற காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது.