தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று சைப் அலிகான், கரீனா கபூர். 2012ல் காதல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தான் கரீனா இரண்டாவதாக ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது கரீனா மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என பாலிவுட் மீடியாக்கள் சிலவற்றில் செய்திகள் வெளிவந்தன. அவற்றை கரீனா மறுத்துள்ளார்.
அது குறித்து சமூக வலைத்தளத்தில், “நான் கர்ப்பம் இல்லை. தான் ஏற்கெனவே இந்திய மக்கள் தொகைக்கு நிறைய செய்துவிட்டேன் என சைப் சொன்னார்” என கொஞ்சம் கிண்டலாகவும் பதிவிட்டிருந்தார்.
சைப் அலிகான் அவரது முதல் மனைவி நடிகை அம்ரிதா சிங் இருவருக்கும் ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். மகள் சாரா அலிகான் தற்போது பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகை. மகன் இப்ராஹிம் குழந்தை நட்சத்திரமாக ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். தற்போது கரண் ஜோஹர் இயக்கி வரும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
சைப் அலி கானுக்கு இரண்டு மனைவிகள் மூலம் மூன்று மகன்கள், ஒரு மகள் இருப்பதைத்தான் கரீனா கபூர் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.