திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் 5 படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. மேலும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பல நடிப்பில் 2015ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி வெளியான படம் பாகுபலி. இந்த படம் திரைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படத்தில் அவந்திகா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் தமன்னா. இந்நிலையில் அதுகுறித்து தற்போது அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், பாகுபலி படத்தில் நடித்து ஏழு வருடங்களுக்கு பிறகும் ரசிகர்கள் என்னை அவந்திகா என்று அழைப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பது மிகப்பெரிய பெருமை என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் தமன்னா.