ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கே.பாக்யராஜ் இயக்கிய திகில் படம் விடியும் வரை காத்திரு. இந்த டைட்டிலில் தற்போது புதிய படம் ஒன்று தயாராகிறது. இதனை லிப்ரா புரொக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. டைட்டிலுக்கான முறையான அனுமதியை கே.பாக்யராஜிடம் பெற்றிருக்கிறார். நேற்று நடந்த படத்தின் பூஜையில் கே.பாக்யராஜூம் கலந்து கொண்டார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷாஜி சலீம் இயக்குகிறார்.
இதில் விதார்த், விக்ராந்த், வருண், கார்த்திக் நடிக்கிறார்கள். இவர்களுடன் மஹாலட்சுமி, நிமி, குயின்ஸி, வலீனா என 4 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஞானசவுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார், அஷ்வந்த் இசை அமைக்கிறார். படப்பிடிப்புகளை ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு இரவில் நடப்பது மாதிரியான கதை. பாக்யராஜ் இயக்கிய படம் போன்று இதுவும் திகில் பட ஜார்னரில் படமாகிறது.




