கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் மறைமுகமாக ரெட் கார்டு போட்டு இருந்தது. இதன் காரணமாக சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர் சமீபத்தில் அந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார் வடிவேலு.
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தற்போது மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் அப்பாவாக முதன்மை கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து இந்த மாமன்னன் படமும் வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கக்கூடிய ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்று அப்படக்குழுவில் தெரிவிக்கிறார்கள்.