வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பாகுபலி, பாகுபலி 2 , ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கி ஹாலிவுட் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் ராஜமவுலி. அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் என்ற படம் 1100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது. அடுத்தபடியாக மகேஷ் பாபு நடிக்கும் தனது புதிய படத்தை இயக்கப் போகிறார். ஆப்பிரிக்க காடுகளை மையமாகக் கொண்ட கதையில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில் தற்போது ராஜமௌலி அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது கனவு படமான மகாபாரதத்தை இயக்குவது எப்போது? என்பது குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஆர்ஆர்ஆர் படத்தையடுத்து மகேஷ்பாபு நடிப்பில் ஒரு மெகா படத்தை இயக்கப்போறேன். இந்த படத்துக்கு பிறகு நான்கு படங்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அந்த படங்களை முடித்த பிறகு தான் எனது கனவு படமான மகாபாரதத்தை இயக்குவேன். அந்த படத்தை இயக்குவதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால் அந்த படம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் ராஜமவுலி.
இந்த மகாபாரத படத்தை ராஜமௌலி கிடப்பில் போட்டு விட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அது குறித்து தற்போது அவர் இப்படியொரு விளக்கத்தை அளித்துள்ளார்.