மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் பல சமூக சிந்தனை படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர். அவரது ஒரே மகன் விஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.
சந்திரசேகர் நேற்று தன்னுடைய 81வது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார். பிறந்தநாள் கேக்கை தனது மனைவி ஷோபாவுடன் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. வயதான காலத்தில் இருவர் மட்டும் தனியாக பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
படப்பிடிப்பில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள், நடிகைகள் பிறந்தநாள் கொண்டிய போது அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய விஜய், தன்னுடைய அப்பா பிறந்தநாளுக்குக் கூட வரவில்லையா என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளார்கள். விஜய் வெளியூரில் படப்பிடிப்பில இருந்தால் கூட அப்பாவின் மகிழ்ச்சிக்காக வந்திருக்க வேண்டுமல்லவா என்றும் சொல்கிறார்கள். விஜய்க்கும் அவருடைய அப்பா சந்திரசேகருக்கும் கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லை என்ற ஒரு தகவலும் திரையுலகத்தில் உள்ளது.