கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
தமிழ் சினிமாவில் பல சமூக சிந்தனை படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர். அவரது ஒரே மகன் விஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.
சந்திரசேகர் நேற்று தன்னுடைய 81வது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார். பிறந்தநாள் கேக்கை தனது மனைவி ஷோபாவுடன் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. வயதான காலத்தில் இருவர் மட்டும் தனியாக பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
படப்பிடிப்பில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள், நடிகைகள் பிறந்தநாள் கொண்டிய போது அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய விஜய், தன்னுடைய அப்பா பிறந்தநாளுக்குக் கூட வரவில்லையா என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளார்கள். விஜய் வெளியூரில் படப்பிடிப்பில இருந்தால் கூட அப்பாவின் மகிழ்ச்சிக்காக வந்திருக்க வேண்டுமல்லவா என்றும் சொல்கிறார்கள். விஜய்க்கும் அவருடைய அப்பா சந்திரசேகருக்கும் கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லை என்ற ஒரு தகவலும் திரையுலகத்தில் உள்ளது.