ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சினிமாவில் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. இந்த ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகளில் இந்திய சினிமா பிரபலங்களும் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் விருது வழங்குவதற்காக ஆஸ்கர் குழு புதிதாக 397 உறுப்பினர்களை இணைக்கப் போகிறது. இதில் இந்திய சினிமாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் ஹிந்தி நடிகை கஜோல் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் உலகம் முழுவதும் இருந்து 4 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் ஏற்கனவே இந்த குழுவில் உறுப்பினராக இருக்கும் நிலையில் தற்போது சூர்யாவையும் ஆஸ்கர் நிர்வாக குழு தேர்வு செய்திருக்கிறது. இந்த குழுவில் உறுப்பினராக இருப்பவர்கள் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் சூர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.