துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்குக் கிடைத்த வெற்றி சில பல தடைகளையும் தகர்த்தெறிந்துள்ளது. கமல்ஹாசனின் திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 400 கோடி வசூலைக் கடப்பது சாதாரண விஷயமல்ல.
கமல் நடித்து அடுத்து வெளிவரும் படங்களுக்கும் நல்ல வியாபாரம், வசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தானாகவே வந்துவிடும். அதனால், கடந்த இரண்டு வருடங்களாக முடங்கி இருக்கும் 'இந்தியன் 2' படத்திற்கு தற்போது உயிர் வந்துள்ளது.
ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைக்கா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்று பின் பஞ்சாயத்து நடந்து முடிந்துள்ளது. 'இந்தியன் 2' படத்தில் உதயநிதி இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
ஷங்கர், கமல்ஹாசன், லைக்கா, உதயநிதி தரப்பு என அமர்ந்து பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வந்துள்ளார்களாம். ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்க இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாம். அது முடிந்ததுமே 'இந்தியன் 2' ஆரம்பமாகிவிடும் என்று சொல்கிறார்கள்.