பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? | மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை': வெளியிட்ட மணிரத்னம் | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக பலாப்பழ ஓவியம் வரைந்த ஓவியர் | சொல்லாமல் விலகிய பாலிவுட் நடிகர் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்ஷய் குமார் வழக்கு | 'ஸ்படிகம்' இயக்குனரை அழைத்து வந்து வித்தியாசமான முறையில் கவுரவித்த சுரேஷ்கோபி பட இயக்குனர் | மீண்டும் தனுஷ் உடன் படம்: உறுதிப்படுத்திய வெற்றிமாறன் | ‛தனி ஒருவன் 2' எப்போது வரும்?: இயக்குனர், தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்! | நகைச்சுவை நாயகனா? கதாநாயகனா? மக்களே கூறட்டும்; நடிகர் சூரி |
கடந்த 2012ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. அதையடுத்து ஹீரோயின் - வில்லி என மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் அவர், சமீபகாலமாக தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛என்னிடத்தில் சிலர், நீங்கள் எதற்காக ராதிகாவை அம்மா என்று கூப்பிடுவதில்லை என்று கேட்கிறார்கள். நான் எதற்காக அவரை அம்மா என்று கூப்பிட வேண்டும். அவர் என் அப்பாவோட இரண்டாவது மனைவி அவ்வளவுதான். அதோடு நான் ராதிகா மீது கோபத்தில் இருப்பதாகவும் எங்களுக்குள் ஒரு சரியான பேச்சுவார்த்தை இல்லை என்பது போலவும் செய்திகள் வெளியாகிறது. ஆனால் எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருக்கிறது. மேலும் என்னுடைய அம்மாவைதான் நான் அம்மா என்று கூப்பிட முடியும். ஒருவர் தான் ஒருவருக்கு அம்மாவாக இருக்க முடியும். சோசியல் மீடியாவில் யாராவது வம்பு இழுக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.