வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

கடந்த 2012ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. அதையடுத்து ஹீரோயின் - வில்லி என மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் அவர், சமீபகாலமாக தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛என்னிடத்தில் சிலர், நீங்கள் எதற்காக ராதிகாவை அம்மா என்று கூப்பிடுவதில்லை என்று கேட்கிறார்கள். நான் எதற்காக அவரை அம்மா என்று கூப்பிட வேண்டும். அவர் என் அப்பாவோட இரண்டாவது மனைவி அவ்வளவுதான். அதோடு நான் ராதிகா மீது கோபத்தில் இருப்பதாகவும் எங்களுக்குள் ஒரு சரியான பேச்சுவார்த்தை இல்லை என்பது போலவும் செய்திகள் வெளியாகிறது. ஆனால் எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருக்கிறது. மேலும் என்னுடைய அம்மாவைதான் நான் அம்மா என்று கூப்பிட முடியும். ஒருவர் தான் ஒருவருக்கு அம்மாவாக இருக்க முடியும். சோசியல் மீடியாவில் யாராவது வம்பு இழுக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.




