ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கடந்த 2012ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. அதையடுத்து ஹீரோயின் - வில்லி என மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் அவர், சமீபகாலமாக தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛என்னிடத்தில் சிலர், நீங்கள் எதற்காக ராதிகாவை அம்மா என்று கூப்பிடுவதில்லை என்று கேட்கிறார்கள். நான் எதற்காக அவரை அம்மா என்று கூப்பிட வேண்டும். அவர் என் அப்பாவோட இரண்டாவது மனைவி அவ்வளவுதான். அதோடு நான் ராதிகா மீது கோபத்தில் இருப்பதாகவும் எங்களுக்குள் ஒரு சரியான பேச்சுவார்த்தை இல்லை என்பது போலவும் செய்திகள் வெளியாகிறது. ஆனால் எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருக்கிறது. மேலும் என்னுடைய அம்மாவைதான் நான் அம்மா என்று கூப்பிட முடியும். ஒருவர் தான் ஒருவருக்கு அம்மாவாக இருக்க முடியும். சோசியல் மீடியாவில் யாராவது வம்பு இழுக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.