மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை சாய் பல்லவி சமீபத்தில் ‛‛காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் இறைச்சி ஏற்றி சென்ற முஸ்லீம் நபர் கொல்லப்படுவதும் இரண்டுமே மத வன்முறை தான். மதங்களை கடந்து மனிதர்களாய் இருப்போம்'' என கூறினார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. ஜதராபாத்தில் இவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சாய் பல்லவிக்கு நடிகை ரம்யா எனும் திவ்யா ஸ்பந்தனா ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛சாய் பல்லவியை கிண்டல் செய்வதை நிறுத்துங்கள். பெண்களுக்கு மட்டும் கருத்து சுதந்திரம் இல்லையா. நல்ல மனிதனாக இருங்கள் சொன்னால் உடனே தேச விரோதி என முத்திரை குத்துகிறார்கள். வெறுப்பை உமிழ்பவர்களை ஹீரோக்கள் என்கிறார்கள். எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.