எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பதினாறு, அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மது ஷாலினி. கடைசியாக ஆர்.கே.சுரேஷ் நடித்த விசித்திரன் படத்தில் நடித்தார். தற்போது சிபிராஜ் நடித்துள்ள ரேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் நடிகர் கோகுல் ஆனந்த் என்பவருக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கோகுல், ‛‛சென்னை 2 சிங்கப்பூர், திட்டம் ரெண்டு, நடுவன்'' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். நேற்று(ஜூன் 16) ஐதராபாத்தில் எளிய முறையில் நடந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
‛‛வாழ்க்கையில் புதிய அத்தியாத்தை எடுத்து வைத்துள்ளோம். உங்கள் அனைவரின் அன்புக்கு எங்களின் நன்றி'' என்கிறார் மது ஷாலினி.