ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
நடிகர் விஜய் ‛பீஸ்ட்' படத்தினை தொடர்ந்து தற்போது தெலுங்கில் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்து இன்று முதல் சென்னையில் துவங்கி உள்ளது. தீபாவளி வெளியீடாக இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிக்கவுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. இதுதொடர்பாக விஜய்யை அவரது இல்லத்தில் சிவா சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின் போது சிவாவிடம் தனக்கு ஒரு கதை எழுதுமாறு விஜய் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அஜித், ரஜினி ஆகியோரை இயக்கியுள்ள சிவா இதன்மூலம் விரைவில் விஜய் உடனும் இணையலாம் என கூறப்படுகிறது.