25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சமீப காலங்களில் பல சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது தோழியும் நடிகையுமான நக்ஷத்திரா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நக்ஷத்திரா பிரச்னையில் இருப்பது போலவும், அவளை இப்போதே மீட்காவிட்டால் சித்ராவுக்கு நடந்தது போல் தவறாக ஏதாவது நடந்துவிடும் என்றும் குண்டை தூக்கி போட்டார்.
இந்நிலையில், நடிகை நக்ஷத்திரா இந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்ட வீடியோவில், 'எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். ஸ்ரீநிதி பேசியதற்கு அன்றே நான் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவள் பேசியது சோஷியல் மீடியாவில் இந்த அளவுக்கு வைரலாகும் என்று நினைக்கவில்லை. அவள் டிப்ரஷனில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாள். சமீப காலங்களில் அவள் பதிவுகளை பார்த்தாலே அது உங்களுக்கு புரியும்.
ஸ்ரீநிதி பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என் மேல் உள்ள அன்பினால் பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பி விசாரிக்கிறீர்கள், கால் செய்து பேசுகிறீர்கள். ஆனால், ஸ்ரீநிதி சொல்லியது போல் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி' என்று கூறியுள்ளார். இவ்வாறாக கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வந்த ஸ்ரீநிதி கிளப்பிய சர்ச்சைக்கு நக்ஷத்திரா முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட்டார்.