ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம், 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சில், 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் பல நாட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. தமிழ் திரைப்பட உலகில் இருந்தும் பல நடிகர்கள், படைப்பாளிகள் கேன்ஸ் சென்றுள்ளனர். இந்நிலையில், நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம், கேன்ஸ் விழாவில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. மொத்தம் 100 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் முழுதும் ஒரே 'ஷாட்'டில் எடுத்து முடிக்கப்பட்டது.
இதற்காக, 64 ஏக்கர் நிலத்தில் 50க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு, 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் கேன்ஸ் விழாவில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. 'நான்லீனியர்' எனப்படும், சம்பவங்கள் முன் பின் மாறி, மாறி நிகழும் திரைக்கதையை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளதை கண்டு சர்வதேச திரைக்கலைஞர்கள் திகைத்து, ஆச்சரியம் அடைந்தனர். இரவின் நிழல் திரைப்படம், கேன்ஸ் விழாவில் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.