மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து தற்போது பாலா இயக்கும் தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மீனவர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான பிரீ புரொடக்சன்ஸ் பணிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. என்றாலும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் தொடங்குவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் பாலா படத்தில் நடித்து முடித்ததும் ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே .ஞானவேல் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறாராம் சூர்யா. ஜெய் பீம் படம் வெளியானபோது சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தது. அதனால் சூர்யா- ஞானவேல் மீண்டும் இணையும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.