ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் பிறந்தவர் இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர். இப்போதும் பல இளம் இசையமைப்பாளர்கள் முன்னணியில் இருந்தாலும் இவருக்கு இருக்கும் இசை வரவேற்பு வேறு யாருக்கும் இருந்தது இல்லை. தற்போதும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். அதோடு பல ஊர்களில் இசை கச்சேரிகளையும் நடத்துகிறார்.
சமீபத்தில் துபாயை தொடர்ந்து சென்னையில் இசை நிகழ்ச்சியை நடத்தியவர் அடுத்து கோவையில் இசை விருந்து படைக்க உள்ளார். வருகிற ஜூன் 2ம் தேதி தனது 80வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் இளையராஜா. அன்றைய தினம் கோவை, கொடீசியா வளாகத்தில் இசைக்கச்சேரி நடத்துகிறார்.
இதுபற்றி இளையராஜா கூறுகையில், ‛‛எனது பிறந்தநாளில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள்'' என தெரிவித்துள்ளார்.