மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்திருக்கும் படம் o2. த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கூறியதாவது: ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் பேருந்தில் பயணம் செய்கிறாள். அவளது மகனுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதால் அவனுடன் எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும். அந்த பஸ் ஒரு விபத்தில் சிக்குகிறது. அப்போது பஸ்சுக்குள் இருக்கும் அனைவருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை. அந்த பெண்ணின் மகனிடமிருந்து ஆக்சிஜன் சிலிண்டரை அபகரிக்க அனைவரும் முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் அவள் தன் மகனை எப்படி காப்பாற்றுகிறாள் என்பதுதான் படத்தின் கதை.
தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. தாய் பார்வதியாக நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீனா, ஆர்.என்.ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது என்றார்.